Sunday, June 15, 2008

உன்னால் முடியும்! எல்லாம் உனக்குள் உண்டு!


உன்னால் முடியும்
எல்லாம் உனக்குள் உண்டு!
வெல்வதுவும்! தோற்பதுவும்!
நம்பித்தடம் புரள்வதுவும்!
வம்பில் தலைசாய்ப்பதுவும்!- எல்லாம்
உனக்குள் உண்டு!

எழுந்து நட - பூமி
உன் காலடியில்
சூரியன் உன்விரல் நுனியில்
சிறு பொறியும் தீயாகும்!
சீறும் காற்றாய் சீக்கிரம் உயர்வோம்!

Tuesday, June 10, 2008

நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..

நம்ம ஆளு ஒருத்தன் புதிசா கலியாணம் கட்டி தேன் நிலவுக்கு அமெரிக்கா போக தனது புதுமனைவிக்கும் தனக்கும் அமெரிக்கா விசா, ரிக்கட் , தங்குமிடம் எல்லாம் ஒழுங்கு செய்தான்.

அமெரிக்கா போகிற நாளும் வந்தது.

நேற்று இரவு அம்மா குறுகுறுத்தாள் "தம்பி நாளைக்கு 1ம் திகதி சின்னவனுக்கு பள்ளிகூடத்து காசும் கட்ட வேனும், கரண்டு பில்லும் கட்டவேணும்".

எல்லா பிரச்சனைகளையும் செட்டில் செய்து, ரக்ஸி பிடிச்சு விமான நிலையம் வந்து சேர்ந்தார் நம்ம ஆள். நம்ம ஆளுக்கு சந்திரமண்டலம் போகிற சந்தோசம். வாழ்கையின் இலட்சிய கனவு ஒன்று இன்னும் அரைமணித்துளியில் ஈடேறப்போகிறது.

அமெரிக்க கனவில் இடிவிழுந்தது போல் , ரிக்கட் இன்னும் நீங்கள் "Confirm" பண்னவில்லை பிளைட்டில் இடம் இருந்தால் தருவோம் என்றாள். விமான நிலையத்தில் இருக்கும் உள்வரவுக்கான பகுதிக்கு பொறுப்பாய் இருந்த பெண்மணி.

என்ன இழவோ தெரியவில்லை மனைவியின் ரிக்கட்டில் எதோ குழறுபடியாம்! நம்ம ஆள் குழம்பிவிட்டார். மனைவி இல்லாத அமெரிக்காவா நினைத்துபார்க்கவே தலைசுற்றியது. தேன் நிலவுக் கனவு விமான நிலையத்தோடு பிசு பிசுத்து போனமாதிரி தோன்றியது. நம்ம ஆளுக்கு தலையே சுற்றியது.

விமான நிலையத்தில் அங்கும் இங்கும் பைத்தியமாய் அலைந்தார் , விமான நிலைய அதிகாரிகளை சந்தித்தார். சாதுவாய் தெரிந்த ஒரு அதிகாரியை நம்ம ஆள் திட்டித்தீர்த்தார் அந்த ஆள் கடுப்பாகி தகாத வார்த்தைகளால் திட்டினார். புது மனைவிக்கு முன் அவமானப்படுவது தாங்கமுடியாத ஒன்றாக இருந்தது.

மனதுக்குள் அம்மாவை சபித்துக்கொண்டார். "வெளிக்கிடுகிற நேரத்தில அது இல்லை இது இல்லை என்டு கொண்டு "

நம்ம ஆள் செய்வதறியாது நின்றார். பார்க்க பாவமாய் இருந்தது.

அப்பொழுது தான் அந்த அதிசயம்......

தெய்வம் போல் ஒரு அதிகாரி வந்தார் அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது. ரிக்கட் "Confirm" பண்னி ஆச்சு , நிங்கள் இப்ப அமெரிக்க போறதில ஒரு பிரச்சனையும் இல்லை..

ஆனால் .... இழுத்தார்...

நெஞ்சு பகீர் என்றது.......

என்ன ஆனால்........

அதில ஒரு சின்ன பிரச்சனை இரண்டு பேரும் ஒன்டா போகமுடியாது.

நிங்கள் இப்ப போகலாம் , மனைவி அடுத்த பிளைட்டில் தான் வரலாம். அடுத்த பிளைட் 18 மணித்தியாலங்கள் பிந்தித்தான் வரும்.

அதிகாரி குண்டை போட்டார்....

இதுக்கு நீங்கள் சம்மதம் என்றால் , இந்த ரிக்கட்டிலேயே அமெரிக்கா போகலாம், அப்படி இல்லை என்றால் இன்று போய் வசதியான ஒரு நாளுக்கு உங்கள் பயணத்தை நீங்கள் ஒழுங்கு செய்யலாம்.

அதிகாரி மின்னாமல் இடி இடித்தார்....

திரும்பி போய் அம்மா , தம்பிக்கு முன்னால் நிற்பதை நினைக்க அவமானமாய் உணர்ந்தார் நம்ம ஆள்.


நம்ம ஆள் தலையை சோறிந்தார்.......(சிந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.......)


தீர்க்கமாய் இப்பொழுது தலையை நிமிர்த்தி அதிகாரியை பார்த்து சொன்னார்......


நான் இப்ப போறன் மனைவி அடுத்த பிளைட்டில் வரட்டும்......


நம்ம ஆள் எடுத்த அதிரடி முடிவில் மனைவி குழம்பிபோனாள்.....

மனைவியை சமாதானப்படுத்தி ,

மனைவியின் பயணத்தில் எந்த பிரச்சனையும் இனி வராது என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிசெய்து விட்டு , தனது கைக் கணணியையும் (Laptop) அவளிடம் கொடுத்துவிட்டு "நான் போனவுடன் இமெயில் போடுறன் " என்ற வாக்குறுதியுடன்

சோகத்துடன் மனைவியிடம் இருந்து விடைபெற்றார்........

நம்ம ஆள் இப்ப பிளைட்டில் பறக்க , மனைவி விருந்தினர் இருக்கையில் சோகமாய் இருந்தாள்

(போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே...., நானும் சேர்ந்து போக ஒரு சிறகும் இல்லையே.. என்ற பின்னனி பாடல்(Situation song) போட்டால் இந்த இடத்துக்கு நல்லா இருக்கும்)


ஒருவாறாக அமெரிக்க மண்ணில காலடி எடுத்து வைத்தார் நம்ம ஆள்.


ரக்ஸி பிடித்து அவர் பதிவு செய்து வைத்துருந்த தங்ககம் வந்து சேர்ந்தார்.....சொந்த நாட்டைபோல் அல்லாமல் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாததால் நம்ம ஆள் மனதில் அமெரிக்கவிற்க்கு ஒரு தனி மரியாதை எழுந்தது.

மனதுக்குள் தனது நாட்டை திட்டித்தீர்த்தார்........


முதல் வேலையாக தங்ககம் வந்து மனைவிக்கு இமெயில் போட்டார். மனைவி வந்து சேர இன்னும் 18 மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தது......

வந்த அசதிக்கு குளித்து விட்டு அப்படியே கட்டிலில் சரிந்தவர்தான் , நன்றாக தூங்கிப்போனார்....

ஒரு இரண்டு, மூன்று மணித்தியாலம் கடந்திருக்கும் வாசல் கதவையாரோ பலமாக தட்ட சென்று பார்த்தவருக்கு திகைப்பு வாசலில் நின்றது பொலிஸ்.....


உங்கட றூமை செக் பண்ண வெணும் என்டாங்கள்.........


நம்மட ஊரிலதான் இந்தக்கொடுமை என்றால் இங்கேயுமா?.....

சோதனை போட அனுமதித்தார் நம்ம ஆள்.....


போலிஸ்காரன் முதல் வேலையாய் கணணியை ஏதோ தூளாவினான்.


சிறிது நேரத்தில் தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தான். யாரொ கிரிமினலை பிடித்து விட்டதாக கைத்தொலைபேசியில் சொன்னன்.

நம்ம ஆளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பொலிஸ்காரன் கேட்டான்....

இந்த கணணியை இரண்டு மணித்தியாலத்திற்க்கு முதல் நீர் உபயோகித்தீரா என்றான்?

நம்ம ஆள் பவ்வியமாக ஆம் என்றார்.

உம்மை சைபர் கிரைமில் கைது செய்கிறேன் என்றான் போலிஸ்காரன்.....

நம் ஆளுக்கு ஒன்டும் விளங்கவில்லை , தனது மனைவிக்கு இமெயில் மட்டுமே அனுப்பியதாக புலம்பிப்பார்த்தார் , அவன் விடுவதாய் இல்லை .

பொலிஸ்காரன் கத்தினான் உனது லூசுதனமான வேலையால் யாரொ ஒரு அமெரிக்க பெண்மணி சாகக்கிடக்கிறாளாம்......

நான் என் மனைவிக்கு இமெயில் அனுப்பினால் உவனுக்கு என்ன ?

என்ன உளறுகிறான்....
நம்ம ஆள் இப்ப தகர்ந்து போனார், தலை சுற்றியது.

கட்டிய மனைவி நடுத்தெருவில் , நான் இப்பொழுது அமெரிக்கா போலிஸில் எல்லாம் மெல்ல கை நழுவுவது போல இருந்தது...

வாழ்க்கை வெறுத்தது....

நம்ம ஆள் ஆத்திரத்தில் உளறினார்.

நம்ம ஆள் உளறது எதுவும் விளங்காமல் , பொலிஸ்காரன் ஒரு மொழி பெயர்ப்பாளன் ஒருவனை கொண்டுவந்தான்....

இதுவேறு மானப்பிரச்சனையாகியது நம் ஆளுக்கு!

நம் ஆள் மொழிபெயர்ப்பாளனுக்கு அளாக்குறையாக பிரச்சனையை விளங்கப்படுத்த மொழிபெயர்ப்பாளன் எதோ பொலிஸ்க்கு சொல்ல 3 மணித்தியால போராட்டத்திற்க்கு பிறகு , பொலிஸ்காரன் மெல்லிய புண்னகையோடு விடுவித்தான்.

இப்ப் நம்ம ஆள் மொழிபெயர்ப்பாளனிடம் கேட்டான் .....

என்ன பிரச்சனை....இங்கே இமெயில் அனுப்பினா பிடிப்பினமே!

மொழிபெயர்ப்பாளன் சிரித்துவிட்டு சொன்னான் உம்மட மனிசிக்கு நீர் அனுப்பிறதில பிரச்சனையில்லை ஆனால் நீர் போய் அடுத்தவன்ர மனிசிக்கெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

இப்பத்தான் விளங்கியது நம்மாளுக்கு தான் பிழையான முகவரிக்கு இமெயில் அனுப்பினது.


மொழிபெயர்ப்பாளன் தொடர்ந்தான் அனுப்பினது தான் அனுப்பினீர் , புருசன் நேற்றுத்தான் செத்து கவலையில இருக்கிற ஆளாப்பார்த்தெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

உம்மட இமெயிலை பாத்திட்டு அந்த பெண் மயங்கி விழ , அந்த அமெரிக்க பெண்மனியின்ட மகன்காரன் கடுப்பாகி பொலிஸ்க்கு சொல்லிப்போட்டான் இது தான் நடந்தது.

அமெரிக்காவில கொஞ்சம் இந்த விசயங்களில கவனமாய் இருங்கோ என்கின்ற அறிவுரையுடன் மொழிபெயர்ப்பாளன் விடைபெற்றான்.

நம்ம ஆள் முதல் வேலையாய் வந்து தான் அனுப்பிய இமெயிலை திருப்பி வாசித்தார்........

To: My Loving Wife
Subject: I've Reached
Date: 01 June, 2008
I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival tomorrow.
Looking forward to seeing you TOMORROW!
Your loving Hubby........


ஓ கணவன் செத்துகிடகிற மனைவிக்கு இப்படி கணவனிடம் இருந்து இமெயில் போனால் யார்தான் குழம்ப மாட்டார்கள் என்று நினைத்தவாறு தன் வீரதீரச்செயலை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தவாறு மனைவியை அழைக்க விமானநிலையம் வந்தார்.....

மனைவி தூரத்தில் தெரிந்தாள்....

மனதுக்குள் பழைய உற்சாகம்......

ஓடிப்போனார் நம்ம ஆள்..... சினிமா படங்களில் வருவது போல் கட்டி அணைத்து மனைவிக்கு முத்தமிட....

இவர் கிட்ட வந்த பின்னர் தான் மனைவி பத்திரகாளி கோலத்தில் தெரிந்தாள்.....

"ஒரு பொம்பிளையை தனியா விட்டு விட்டு ,என்ன மனிச ஜென்மமோ தெரியேல்ல , இமெயில் அனுப்பிறன் என்டு சொல்லிப்போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு என்ன செய்தியள்?"

"ஒருக்கா போன் பண்ணி பாத்திருக்கலாம் தனே?"

"அமெரிக்கா வந்து முதல் நாளே இப்படி என்றால் ? என்ட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ?"


நம ஆள் செய்வதறியாது திகைத்து நின்றார். முதலுக்கே நஸ்டம் வந்தது போல் இருந்தது , இனி தேன் நிலவு விளங்கியமாதிரித்தான்....

(சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுகின்றேன்........)

பச்சை வயலே..






பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!

மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!)


ஈழ நிலத்தினில் எத்தனை நாள் இன்னும் சாவு வரவிடுமோ?
உயிர் இங்கு மலிவென எத்தனை நாள் இன்னும் கூவித்திரிந்திடுமோ?

வாழும் வயதினில் வாச மலரிங்கு தீயில் எரிந்திடுமோ?
எங்கள் வாசல் முழுவதும் சோகம் எரித்திடும் பாயில் சரிந்திடுமோ?

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


அன்னை நிலத்தினுக்காக கரும்புலி ஆகி நடந்திடுவோம்.
நாம் அங்கு எரிந்திடும் போதில் பகை மடி மீது சிரித்திடுவோம்.

அண்ணன் நினைவினில் எம்மை மறந்துமே விண்னில் பறந்திடுவோம்.
எம் ஆசை எல்லாம் தமிழ் ஈழம் அதற்கென அங்கு வெடித்திடுவோம்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


தேசபுயல் இங்கு வீசும் பொழுதினில் சோகம் வருவதில்லை.
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள் இனி பகை தீயில் எரிவதில்லை.

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும் நம்பியிருந்திடுங்கள்.
எம் தேகம் வெடித்திடும் போதில் விடுதலை கீதம் படித்திடுங்கள்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


Sunday, June 8, 2008

சாப்ட்வேர் வாழ்க்கையில் ஒரு நாள்...

இமெயிலில் நண்பன் ஒருவரிடம் இருந்து வந்த இப்பகுதியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த கறுமத்தை தான் 10 வருசமா நானும் பண்னுவதால் எதோ அன்னிய நாடொன்றில் நம்ம ஆளைக்கண்ட சந்தோசம்.....

இன்னைக்கு காலையில் எழுந்தப்பவே மணி எட்டு. 8:30மணிக்கு ஆபிசுல ஒரு மீட்டிங். எவன் தான்இப்படி 8:30மணிக்கு மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை. எனக்கு ஒரு மேனேஜர் இருக்கார். அவர்ஒரு சேவல் மாதிரி. 5 மணிக்கு மனுஷன் எழுந்திடுவாரு. ஒரே மெயிலா அடிச்சி தள்ளுவாரு.7:30மணிக்கு ஆபிசுக்கு வந்திடுவாரு. அதனால் அவர் எப்பவுமே மீட்டிங் செட் பண்ற நேரம் காலைஒன்பது மணி, 8:30 மணி இப்படி தான் இருக்கும். மேனேஜர்னா என்னா கொம்பா அப்படின்னு எனக்குதோணும். இருந்தாலும் என்ன பண்றது குப்பை கொட்டியாகனுமேன்னு மல்லு கட்ட வேண்டி இருக்கு.இன்னைக்கு 8:30மணி மீட்டிங் மட்டம் தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு காக்கா குளியல் போட்டு8:30 பஸ் புடிச்சு, அப்புறம் ஒரு டிரெயின் புடிச்சி ஆபிஸ் நுழையறப்ப மணி 9:30, மீட்டிங்அவ்வளவு தான்னு நமக்கு தெரியும். மேனேஜருக்கு முகத்தை காட்டமா அப்படியே நழுவி சீட்டுக்குவந்துட்டேன். சீட்டுக்கு வந்ததும் முதல் வேலை இ-மெயில் செக் பண்றது. காலையில இது ஒரு இம்சை. ஒரு 100மெயில் இருக்கும். அதுல எனக்கு தேவையான மெயில் ஒரு 5 மெயில் தான் இருக்கும். அந்த 5மெயிலை கண்டுபிடிக்க 100 மெயிலையும் மேய்ந்து ஆகணும். வேகமா ஒவ்வொரு மெயிலா பார்த்துமுடிச்சப்ப மணி 10:30 ஆயிடுச்சி. ரொம்ப களைப்பா இருந்துச்சா ஒரு காபி குடிக்கலாம்னுஆபிஸ் cafeteria வந்தேன். இந்த காபி ஒரு இம்சை. சென்னையில நாயர் கடை காபி, டீ சாப்பிட்டுபழக்கப்பட்டு போன நமக்கு இது ஒரு கசாயம் மாதிரி. ஒரு 6 பாக்கெட் சக்கரை எடுத்தேன். 6பாக்கெட் சக்கரை கொட்டினா, அது ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு வரும். அதை போட்டு கப் நிறைய காபிஊத்தி, சும்மா கொஞ்சம் பால் ஊத்தினா கசாயம் தயார் ஆயிடும். அதுக்கு விலை 1.25டாலர். 50ரூபாய் அப்படின்னு ஆரம்ப காலத்துல மனசு கணக்கு போடும். இப்பவல்லாம் அப்படி இல்லை. நம்ம ஊருவிலை நிலவரம் இப்ப மோசமாமே… காபி குடிச்சு முடிக்கறப்ப மணி 11மணி ஆயிடுச்சி. மேனேஜர் எங்க நம்பள தேடுவாரோஅப்படின்னு பயம் எல்லாம் இல்ல. அதான் "I am looking into this" அப்படின்னு ஒரு நாலுஇ-மெயில மேனேஜருக்கு "CC" போட்டு தட்டிட்டு வந்திருக்கோம்ல. பையன் ஆபிசுல தான் இருக்கான்அப்படின்னு மேனேஜருக்கு தெரியும். வேலை களைப்புல தம் போட போயிருப்பான் அப்படின்னுநினைச்சுருப்பாரு. 11மணிக்கு சீட்டுக்கு வந்து "Looking into this" அப்படின்னு அரை மணிநேரத்துக்கு முன்னாடி சொன்ன பிரச்சனையை பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ளாற ஒரு இம்சை "Anyupdate on this" அப்படின்னு கேட்டு தொலைச்சிருக்கான். அவன் பெயரைப் பார்த்தேன். நம்மவூர்ஆளு தான். நம்மள மாதிரியே இப்படி மெயில் அடிச்சிட்டு "தம்" போட போயிருப்பான் அப்படின்னுநினைக்கிறேன். பார்த்து தொலைக்கிறேண்டா அப்படின்னு திட்டிக்கிட்டே அந்த மெயிலை முதல்லகவனிச்சு அவனுக்கு ஒரு பதில் போட்டேன். அது போல அந்த நாலு மெயிலையும் கவனிச்சு முடிச்சாமணி 12:30 ஆயிடுச்சி. சாப்பாடு நேரம் வந்திடுச்சிடோய் அப்படின்னு நம்ம நட்பு ஒருத்தன் வந்துதோலைத் தட்டினான். சரிடா அப்படின்னு கம்யூட்டரை லாக் பண்ணிட்டு கிளம்பினோம். எங்க சாப்பிடறதுன்னு முடிவு பண்றது அடுத்த பிரச்சனை. சரி, நேரா subway போலாம்டாஅப்படின்னு முடிவு பண்ணி Mc D போனோம். இது ஒரு கொடுமையான விஷயம். ஆனாலும் cheapand best. ஒரு பிரட்டை வைச்சி நாளு இலை, தழைகளை வச்சி கொடுப்பானுங்க. அதுக்கு 4டாலர். இங்கயாவது பரவாயில்லை. இதையே நம்ம சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவுல வச்சி அதுக்கு200ரூபான்னு சொல்றானுங்க. அங்கன நம்ம அமுல் பேபி பசங்க, பொண்ணுங்க வாங்கற கொடுமைக்கு பெயர்- அமெரிக்க கலாச்சாரமாம். லஞ்ச் சாப்பிட்டு முடிக்கறப்ப மணி 1:30. நேரா சீட்டுக்கு வந்தா, 2மணிக்கு ஒரு மீட்டிங்காம்.எப்படி இன்னும் சிறந்ததா மென்பொருள் தயாரிக்கலாம் அப்படின்னு அனலிசிஸ் பண்ண போறாங்களாம்.அதுக்கு பேர் - Brain Storming. இப்படி பேசி பேசியே மண்டையில முடி இல்லாமாபோச்சிடுடா அப்படின்னு நொந்து நூடுல்சானேன். ஏற்கனவே அனுப்பின மெயிலுக்கு விளக்கம் கேட்டுசில மெயில்கள். அதுக்கு விளக்கம் சொல்லி முடிச்சி, நேற்று பாதியில விட்டுட்டு போன codingஆரம்பிக்க போனா, மனசுல நம்மவூர் ஞாபகம் வந்திடுச்சி. நம்ம Rediff, தினமலர் எல்லாம் ஒருபார்வை போட்டுட்டு பார்த்தா மணி 2 ஆயிடுச்சி. "Coming.." அப்படின்னு மேனேஜர் கேட்க, வர்றேண்டா அப்படின்னு கிளம்பினேன். நடந்து போனா நம்மபக்கத்து ப்ராஜக்ட் பொண்ணு க்ராஸ் ஆச்சு. ஒரு ஸ்மைல் போட்டு "ஹாய்" சொல்லிட்டு "கொஞ்சம் குண்டாஆயிட்டா" அப்படின்னு நினைச்சுக்கிட்டே கான்பிரன்ஸ் ரூம் போனேன். கொஞ்ச நேரம் சொந்த கதை சோககதை எல்லாம் பேசிட்டு நல்லா Brain Storming பண்ணா, தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு.கெட்டியா முழிச்சிக்கிட்டு ஐடியாவா போட்டு தள்ளினோம். இப்ப ஓடற இந்த Process, முப்பதுநிமிடம் ஆகுது. 5-10 நிமிடத்துல இது ஓடியாகனும் அப்படின்னு நம்ம மேனேஜர் சொன்னாரு.1மணி நேரம் ஓடிக்கிட்டு இருந்ததை 30நிமிடம் ஆக்கனும்னு சொன்னே. இப்ப 30நிமிடம் ஓடறது5-10 நிமிடமாம். இப்படியே வேலையை கொடுத்துக்கிட்டே இருங்க, அப்ப தான் எல்லோருக்கும், எல்லாகாலத்திலேயும் வேலை இருக்கும் அப்படின்னு நினைச்சுக்க்கிட்டேன். அடுத்த ப்ராஜக்ட்டா இப்பஇருக்கிற Database மாற்றி வேற Database போகலாம்னு சொன்னாரு. போன வருஷம் தான் வேறஒண்ணுல இருந்து மாறினோம். இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க. இங்கேயே நான் ரிடயர் ஆயிடறேன்அப்படின்னு நினைச்சுக்கிட்டேன். மீட்டிங் முடிஞ்சப்ப மணி 3 ஆயிடுச்சி. "let's go for coffee" அப்படின்னு மேனேஜர்சொன்னாரா, அப்படியே cafeteria வந்தோம். காபி வாங்கி ஒரு தம் போட்டு முடிக்கறப்ப மணி3:30 ஆயிடுச்சி. நேரா சீட்டுக்கு வந்து பாதியில இருந்த Codingஐ ஆரம்பிச்சேன். அத்தமுடிச்சு, டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சா மணி 4:30 ஆயிடுச்சி. மறுபடியும் ஹிந்து, எக்னாமிஸ்டைம்ஸ், blooomberg, சி.என்.என் அப்படின்னு மேய்ந்து விட்டு மணி பார்த்தா 5:30ஆயிடுச்சி.மேனேஜர் வீட்டுக்கு போயிட்டாரா அப்படின்னு நைசா எட்டி பார்த்தேன். மனுஷன் அசையற மாதிரிதெரியலை. அவருக்கு தெரியும். அவரு அங்க இருந்து கிளம்பினா அடுத்த நொடி எல்லா பசங்களும்எஸ்கேப் ஆயிடுவானுங்க அப்படின்னு. அதான் மனுஷன் 7:30 மணியில இருந்து அசையாம சீட்டுலஉட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. சரி என்ன பண்ணலாம் அப்படின்னு தோன்றப்ப, லைட்டா வாக்கிங்போகலாம்னு நேரா தண்ணி குடிக்க வந்தேன். பச்சை தண்ணி தான் - மினரல் வாட்டர். குடிச்சிட்டுபக்கத்து ப்ராஜக்ட் பக்கமா அப்படியே போனேன். ஒரு கூட்டம் தெரிஞ்சுது. கொஞ்சம் நேரம் அரட்டைபோட்டு விட்டு வந்தா மேனேஜர் வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்காரு. இதை தானே எதிர்பார்த்தோம்அப்படின்னு ஒரு ஸ்மெல் போட்டோம். "Not leaving" அப்படின்னு கேட்டாரு. "Some work to complete" அப்படின்னு சொன்னேன்."Don't work hard" அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. சொல்லுவடா சொல்லுவ, வேலையைவரிசையா குடு அப்புறம் Don't work hard அப்படின்னு சொல்லு அப்படின்னு நினைச்சுக்கிட்டேசீட்டுக்கு வந்து logoff பண்ணிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிய பொழுது மணி 6.

Saturday, March 29, 2008

இந்துக்களின் துடுப்பாட்டம் இன்றும் நாளையும் கொக்குவில் இந்துவில்

யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது.

நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net




இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தினராக ஈ.எஸ்.பி.நிறுவனத் தின் உரிமையாளர் எஸ்.பி.நாகரட்ணமும் கலந்துகொள் கின்றனர்.
காலை 8.15 மணிக்கு விருந்தினர்களின் மங்கள விளக் கேற்றலைத் தொடர்ந்து இரு கல்லூரிகளின் அதிபர்களும் பாடசாலைக் கொடிகளை ஏற்றிவைப்பார்கள். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்படும். அதன் பின் காலை 10 மணிக்குப் போட்டிகள் ஆரம்பமாகும்.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான முதலாவது மிகப்பெரும் துடுப்பாட்டப் போட்டி இது என்பதால் மிக வும் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாண்டு இடம்பெற்ற பருவகாலப் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் இரு அணிகளும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தவுள்ளன. அத் துடன் அனுபமிக்க வீரர்கள் இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்கள்.

போட்டி நடைபெறும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருக் கும் என்று கருதப்படுவதால் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது கல்லூரியின் நீண்டநாள் ஆசை இவ்வாண்டு நிறைவேறுகின்றது
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான இந்துக்களின் துடுப்பாட்டம் இவ்வாண்டு முதன் முறையாக ஆரம்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். எமது கல்லூரியின் நீண்டநாள் ஆசை இவ்வாண்டு நிறைவேற்றப்படு வது இந்துக் கல்லூரியின் மைந்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

2007ஆம் ஆண்டில் எமது கல்லூரி அணி யாழ். மாவட்ட சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வலுவான நிலையில் உள்ள எமது அணி தனது முழுமையான திறனை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இதேபோன்று கொக்குவில் இந்துக் கல்லூரியின் அணியும் பலமான நிலையில் உள்ளது. இரண்டு பல மான அணிகளும் மோதுகின்றபோது இத்துடுப்பாட்டம் நிகழ்வு எல்லோருக்கும் சிறப்பான மகிழ்ச்சியான விறுவிறுப்பான போட்டியாக அமையும் என எதிர் பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் எதிர்காலத்தில் தேசிய மட்டப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களை அனுப்புவதற்கு இந்த இந்துக்களின் துடுப்பாட்டம் ஒரு களமாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
யாழ்.இந்து அதிபர்
வீ.கணேசராஜா

பலம் வாய்ந்த பல பந்துவீச்சாளர்கள்
எமது கல்லூரி அணி வசம் உள்ளனர்
யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இந் துக் கல்லூரிகள் இரண் டுக்குமிடையே நடைபெறும் இத்துடுப்பாட்டப் போட்டி இரு கல்லூரிச் சமூகத்தின தும் நீண்ட நாள் கனவாகி இன்று நன வாகின்றது. எமது கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்கள் பலம் வாய்ந்த நிலையிலுள்ள அதேவேளை, துடுப் பாட்ட வீரர்களும் சிறந்து விளங்குகின்றார்கள். இவ்வணி கடந்த ஆண்டு மாவட்டச் சம்பியனாக 17 வயதுப் பிரிவில் தெரிவாகியது. 19 வயதுப் பிரிவும் சாதனை படைக்கும் என நம்புகின்றேன். எனது காலத்தில் இப்போட்டி நடை பெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.
எமது கல்லூரி அணி நிச்சயம் இப்போட்டியில் சாத னையை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
ந.நிமலன்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்
யாழ்.இந்துக் கல்லூரி.

முழுத் திறமையையும் வெளிப்படுத்தி
இந்து அன்னைக்குப் பெருமை சேர்ப்போம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யுடன் எனக்குள்ள தொடர்பு நெருக்க மானது, நீண்டகாலமானது. நான் இந்துக் கல்லூரியில் மாணவன். கிரிக் கெட் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீர ராகவும் ஆசிரியராகவும் இருந்துள் ளேன். அணியில் விளையாடிய கால கட்டத்தில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பதில் முக்கிய பங் காற்றியுள்ளேன். அதைத் தொடர்ந்து பயிற்றுநராய் இந்த அணிக்கு பயிற்சியளிப்பது மனதிற்கு இன்பத்தைத் தரு கின்றது. அந்த வகையில் தற்போதைய யாழ். இந்து அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் திறமையை வெளிகாட்ட அதிகளவான போட்டிகளில் பங்குபற்ற முடியாதது துரதிர்ஷ்டம். ஆனா லும் இன்று ஆரம்பமாகும் போட்டியில் தமது முழுத் திற மையும் வெளிப்படுத்தி இந்து அன்னைக்குப் பெரு மையை உண்டாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அத்துடன் இவ்வாறான போட்டிகளினால் எதிர் காலத்தில் திறமையான வீரர்களை யாழ்.மாவட்டம் பெற் றுக்கொள்ளும் என்பதில் ஐயம் எதுவுமில்லை.
என்.சிவராஜ்
யாழ்.இந்து பயிற்றுநர்.

இந்தத் துடுப்பாட்டப் போட்டி எமது நீண்டகால எதிர்பார்ப்பு யாழ்ப்பாணத்தில் உயர்வீச்சுக் கொண்ட இரு கல்லூரிகளுக்கும் இடை யில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டி நீண்டகால எதிர்பார்ப்பாகும். எமது கல்லூரிக்கும் யாழ்.இந்துக் கல்லூ ரிக்கும் இடையிலான உறவு இறுக் கமானது. இரு கல்லூரிகளும் ஆரம் பிக்கப்பட்ட நோக்கமும் ஒன்றா கும். அன்று முதல் இன்று வரை அதிபர், ஆசிரியர் உறவு, சமூக உறவு என்பன பலமட் டங்களில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துவின் பல அதிபர்கள், ஆசிரியர்கள் இந்துக் கல்லூரி யின் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்துள்ளனர். இரு கல் லூரிகளுக்குமான சமூகமும் ஒன்றாகவே உள்ளது.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெறும் துடுப்பாட்டப்போட்டி வரலாற்றின் முதற்படியாகும். இப் போட்டியுடன் இணைந்த வகையில் வருங்காலத்தில் பலபோட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம் மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி, நல்லு றவு, சமூகப்பற்று, புரிந்துணர்வு என்பனவற்றை உரு வாக்கமுடியும் எனத் திடமாக நம்புகின்றேன். இப்போட்டி முதற்தடவையாக பெரிய அளவில் நடைபெறுவதால் மாண வர்கள் இயல்பாகவே வீறுகொண்டு எழுந்துள்ளனர். இவ் வெழுச்சி இரு கல்லூரிகளுக்கும் இடையில் உறவை மேம் படுத்தவேண்டுமே தவிர எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடாது.
இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு இரு கல்லூரி களின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பி கள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். புத்தாயிரம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட் டுள்ள இப்போட்டி சிறப்புற நடைபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கொக்குவில் இந்து அதிபர்
ஏ.அகிலதாஸ்

யாழ்.மண்ணில் திறமையான வீரர்களை உருவாக்க இது புதிய அத்தியாயம்
19வயதுப் பிரிவினருக்கான சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டியானது தொடர்ச்சியாக பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இவ்வருடம் இப்போட்டியானது இரு இந்துக் கல் லூரிகளின் சமூகத்தின் முயற்சியினால் மாபெரும் துடுப்பாட்ட போட்டியாக (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏடிணஞீதண்) என்ற பெயரில் விளையாட உள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப் பாக அமையும்.

இன்று தொடங்கும் இப்புதிய அத்தியாயம் யாழ்.மண் ணில் திறமை மிக்க துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கி எமது பிரதேசத்தில் விளையாட்டுத்துறையில் மகுடம் சூடவைக் கும் என நம்புகின்றேன். யாழ்.மண்ணில் முதன்முறையாக எமது கல்லூரியில் இப்போட்டி நடைபெறுவது பெருமை மிக்க வரலாற்றுப் பதிவாக அமையும்.
இப்போட்டியில் மோத உள்ள இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிக்காட்டி சாதனைகளை நிலைநாட்ட கொக்குவில் இந்துக் கல்லூரியின் சார்பில் வாழ்த் துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இ.ச.உமாசுதன்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்
கொக்குவில் இந்துக் கல்லூரி.

சவால் மிக்க போட்டியாக "இந்துக்களின் துடுப்பாட்டம்' அமையும் "இந்துக்களின் துடுப்பாட்டம்' இவ் வருடம் முதல்முறையாக ஆரம்பமாவ தில் இரு பாடசாலைச் சமூகங்களும் பெருமிதம் கொள்கின்றன. எமது பாட சாலை வீரர்கள் இப்போட்டியில் வெற்றி யீட்ட வேண்டும் என்பதில் ஆர்வத்து டனும் உற்சாகத்துடனும் இருக்கின்றார் கள். அணி 4 வேகப்பந்து வீச்சாளர் களையும் 2 சுழல் பந்துவீச்சாளர்களை யும் கொண்டுள்ளது. அத்துடன் துடுப்பாட்டத்தில் இவ் வாண்டு 3 வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்திருக்கின் றார்கள். இப்போட்டி எமது அணிக்குப் பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். இப்போட்டி இரு பாட சாலை அதிபர்களின் முன்முயற்சியில் சிறப்பாக அமைந்து இரு அணிவீரர்களும் சிறப்பாக விளையாடி சாதனை புரிய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
எஸ்.கோகுலன்
கொக்குவில் இந்து பயிற்றுநர்.

பழைய மாணவர் உள்ளத்திலிருந்து...
யாழ்.மண்ணில் பிரபல்யம் மிக்க இரண்டு கல்லூரி கள் மோதும் ஆட்டமாக இந்த "இந்துக்களின் துடுப்பாட்டம்' அமையப்போகின்றது. யாழ். இந்துக் கல்லூரியைப் பொறுத்த மட்டில் அது பல ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் முன்னணியில் திகழ்கின்றது. குறிப்பாக கிரிக்கெட்டுக்கு யாழ். இந்து மிகவும் பெயர் போனது. பல முதற்தரப் போட்டி களில் யாழ். இந்துவின் கிரிக்கெட் அணி தனது பெயரைப் பதிவு செய்திருக்கின்றது.
அந்த வகையில் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு கல்லூரிகளும் இந்தப் பருவகாலப் போட்டிகளில் தமது முழுத்திறமையை யும் ஆட்டங்களில் வெளிப்படுத்தியிருந்தன. இதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமை யும்.

யாழ். இந்து அணி பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்ததாக உள்ளது. அதேவேளை, கொக்குவில் இந்து அணி யிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். சவால் மிக்க இந்தப் போட்டியில் வெல்வது யார் என்பதைப் பொறுத்தி ருந்து பார்ப்போம்.
கே.நகுலேந்திரன்
யாழ். இந்து பழைய மாணவன்

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் முக்கிய இரு பாடசாலை அணிகள் இன்று மோதுகின்றன.
முன்னாள் அதிபர்களான அ.பஞ்சலிங்கம், எஸ்.மகேந்தி ரன் போன்றவர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்று முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
இரு கல்லூரிகளின் ஆதரவாளர்களும் மோதி விபரீதங் களில் ஈடுபடுவார்களோ என்ற அச்ச நிலை காணப்படு கின்றது. நேசபூர்வமாக நட்பு ரீதியாக அணுகி அமைதி யான ஆட்டமாக இன்றைய ஆட்டம் அமைய சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
மாணவர்கள் தமது வேகத்தைக் கட்டுப்படுத்தி அமைதி யான ஆட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
எஸ்.நகுலன்
கொக்குவில் இந்து பழைய மாணவன்
சனிக்கிழமை காலை

Sunday, February 24, 2008

கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது

தைமகளே! வந்தெம் தலைவாசல் மீதமர்க.

கையோடு உந்தன் கணவன்
ஓளித்தேவன்
சூரியனைக் கூட்டிவந்தெம் சுற்றத்துக்கறிமுகம் செய்.

ஊரிருந்து வேரை உதறி
வெறும் கூடாய்
மூச்சிழுத்துக் கொண்டு முடங்கியுள்ளோம்
எம் தாயே!
பாய்ச்சு உன்விழிப்பார்வை பாவமெலாம் கரையட்டும்.

தஞ்சமென வந்தெம்மைத் தாங்கு
திசையெங்கும்
அஞ்சற்க என்றோர் அசரீரி கேட்கட்டும்.

எந்தத் தடைவரினும் இருப்போம்.

சூழ்ந்திருக்கும்
கங்குல் விடியுமட்டும் களத்தினிலே போரிடுவோம்.

போரில் குதித்த இனம் போர்வையுள்ளே கிடவாது
வேரில் உரம் பாய்ந்த வீரமரம் சாயாது.

சுற்றிவர மூண்டு சுடர்கிறது விடுதலைத் தீ
வேற்றி வருவுக்கு விடிசேவல் கூவுறது.

வந்த பகை சுருண்டு வாலிழக்கும்
‘மகிந்தரது’
கொற்றம் சரிந்து குலையும்
தமிழரது
முற்றம் பூமலர்த்தி முறுவலிக்கும்
புலம் பெயர்ந்து
போன பறவையெல்லாம் புலரியிலே கூடுவரும்.

காண விழிகோடி காணாத பேரழகாய்
மீனகமும்
கோணமலையோடு மன்னாரும்
யாழகமும்
வன்னி நாடதுவும் விலங்கறுக்கும்.

மின்மினியா சூரியனின் முகத்தில் நெருப்பெரிக்கும்?
சின்ன எலிக்குஞ்சா சிறுத்தையினை மண்விழுத்தும்?
வன்னியினை வந்து வளைத்து
அட அந்தப்
'பொன்சேகா' என்ற பொடிப்பயலா வெற்றிகொள்வான்?

வற்றாப்பளையாச்சி வடிவிருக்கும்
அரியாத்தை
முற்றமிது இங்கே முலைசுரத்தல் பாலல்ல
வேழம் படுத்த வீராங்கனை எரிந்து
ஆழம் கிடைக்கின்ற அடங்காமன் பெருவீரம்,
எப்போது வந்து எவன் போருக்கழைத்தாலும்
கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது.
ஆடிச்சரிந்து எங்கள் ஆலமரம் சரியாது.

கோடி படைவரினும் ‘கோத்தபாய’ கனவொன்றும் வெல்லாது
இங்கே விடுதலைத் தீ அணையாது
உள்ளோடி ஓடி உரம் பெற்ற வேர்களிலே
வெள்ளெலிகள் கடித்து விழுத்திட முடியாது.

நம்பும்
தமிழீழ நடைபயணம் இடையினிலே
தங்கிவிட அல்ல தன்னிடத்தைச் சேர்ந்தவர்க்கே
சூரியன் சூட்டில் சூல்கொண்ட மலையினிலே
காரிருட்டு மேகம் கவியாது
விடுதலையின்
வேரினிலே எந்த வீச எறும்பும் கடியாது.

மீன்பாடும் வாவி மிளிரும்
இரணைமடு வான்பாயும்
கோண வரை மீது முகிலிரங்கும்
பாலாவி நீர்கொண்டு பாடும்
கீரிமலை
ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.



புதுவை இரத்தினதுரை

Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.
சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.





அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

நன்றி :- புதினம்

Saturday, January 5, 2008

உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்

1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.

1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.
1.ஆர்மெனியா (Armenia )
2.அசெர்பைஜான் (Azerbaijan )
3.பயிலொரஷ் (Belarus )
4.எஸ்ரொனியா (Estonia )
5.ஜோர்ஜியா (Georgia )
6.கசகஸ்தான் (Kazakhstan)
7.கிர்கிஸ்தான் (Kyrgyzstan )
8.லற்வியா (Latvia )
9.லிதுவேனியா(Lithuania )
10.மோல்டொவா (Moldova )
11.ரஷ்யா (Russia )
12.ரஜிகிஸ்தான் (Tajikistan)
13.ரேர்க்மெனிஸ்தான் (Turkmenistan )
14.உக்ரேய்ன் (Ukraine )
15.உஸ்பெக்ஸ்தான் (Uzbekistan )


1990 களின் ஆரம்பத்தில் யுகோசலாவாக்கியாவின் வீழ்ச்சியுடன் 5 புதிய நாடுகள் உதயமாகின.
1. பொஸ்னியா (Bosnia- 29/02/1992 இல்)
2.குரோசியா (Croatia-25/06/1991 இல்)
3.மசடோனியா (Macedonia- 08/09/1991 இல் அது தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த்த போதும் 1994 ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கிகாரம் பெற முடிந்தது.)
4.மொன்டினிக்குரோ (Montenegro -03/06/2006)
5.சேர்பியா (Serbia- 17/04/1992)
6.சலோவேனியா (Slovenia- 25/06/1991 இல்)

21/03/1990 நம்பியா(Namibia) , தென் ஆபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.

23/05/1990 இல் வடக்கு யெர்மனும் தெற்க்கு யேர்மனும் இனைந்து யெர்மன்(Yemen) எனும் புதிய நாடு உருவாகியது.

03/10/1990 இல் கிழக்கு ஜெர்மனியும் ,மேற்க்கு ஜெர்மனியும் இனைந்து ஜெர்மனி(Germany) எனும் நாடு உலக பந்தில் மீண்டும் உருவானது.

17/09/1991 மார்ஷல் தீவுகள்(Marshall Islands) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

17/09/1991 மைக்கிரோனேசியா(Micronesia) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

01/01/1993 ம் ஆண்டு செக்கொசெலாவாக்கியா செக்(Czech) குடியரசாகவும் , செலோவாக்கியாவாகவும்(Slovakia) இரண்டாய் பிரிந்தன.

25/05/1993 எரித்திரியா(Eritrea) வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.



1/10/1994 போலலு(Palau) அமெரிக்காவின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

20/05/2002 கிழக்கு தீமோர் (East Timor) 1975 ம் ஆண்டு போர்த்துகல் இடம் இருந்து சுதந்திர நாடாகிய போதும் ,தனது இறைமையை இந்தோனேசியாவிடம் இழந்தது. மீண்டும் 2002 இல் தனது வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

சோமாலிலாந்து (Somaliland) 18/05/1991 இல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்ததுடன் இன்றுவரை அமெரிக்காவாலும் சில ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளாலும் அங்கிகரிக்க பட்ட ஓர் நாடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.



தமிழீழம் (Tamil Eelam)- 14/5/1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படி சிறிலங்கா குடியரசில் இருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்னும் தனி நாடொன்றை அமைப்பதற்காய் இன்று வரை போராடிவரும் நாடு.