நம்ம ஆளு ஒருத்தன் புதிசா கலியாணம் கட்டி தேன் நிலவுக்கு அமெரிக்கா போக தனது புதுமனைவிக்கும் தனக்கும் அமெரிக்கா விசா, ரிக்கட் , தங்குமிடம் எல்லாம் ஒழுங்கு செய்தான்.
அமெரிக்கா போகிற நாளும் வந்தது.
நேற்று இரவு அம்மா குறுகுறுத்தாள் "தம்பி நாளைக்கு 1ம் திகதி சின்னவனுக்கு பள்ளிகூடத்து காசும் கட்ட வேனும், கரண்டு பில்லும் கட்டவேணும்".
எல்லா பிரச்சனைகளையும் செட்டில் செய்து, ரக்ஸி பிடிச்சு விமான நிலையம் வந்து சேர்ந்தார் நம்ம ஆள். நம்ம ஆளுக்கு சந்திரமண்டலம் போகிற சந்தோசம். வாழ்கையின் இலட்சிய கனவு ஒன்று இன்னும் அரைமணித்துளியில் ஈடேறப்போகிறது.
அமெரிக்க கனவில் இடிவிழுந்தது போல் , ரிக்கட் இன்னும் நீங்கள் "Confirm" பண்னவில்லை பிளைட்டில் இடம் இருந்தால் தருவோம் என்றாள். விமான நிலையத்தில் இருக்கும் உள்வரவுக்கான பகுதிக்கு பொறுப்பாய் இருந்த பெண்மணி.
என்ன இழவோ தெரியவில்லை மனைவியின் ரிக்கட்டில் எதோ குழறுபடியாம்! நம்ம ஆள் குழம்பிவிட்டார். மனைவி இல்லாத அமெரிக்காவா நினைத்துபார்க்கவே தலைசுற்றியது. தேன் நிலவுக் கனவு விமான நிலையத்தோடு பிசு பிசுத்து போனமாதிரி தோன்றியது. நம்ம ஆளுக்கு தலையே சுற்றியது.
விமான நிலையத்தில் அங்கும் இங்கும் பைத்தியமாய் அலைந்தார் , விமான நிலைய அதிகாரிகளை சந்தித்தார். சாதுவாய் தெரிந்த ஒரு அதிகாரியை நம்ம ஆள் திட்டித்தீர்த்தார் அந்த ஆள் கடுப்பாகி தகாத வார்த்தைகளால் திட்டினார். புது மனைவிக்கு முன் அவமானப்படுவது தாங்கமுடியாத ஒன்றாக இருந்தது.
மனதுக்குள் அம்மாவை சபித்துக்கொண்டார். "வெளிக்கிடுகிற நேரத்தில அது இல்லை இது இல்லை என்டு கொண்டு "
நம்ம ஆள் செய்வதறியாது நின்றார். பார்க்க பாவமாய் இருந்தது.
அப்பொழுது தான் அந்த அதிசயம்......
தெய்வம் போல் ஒரு அதிகாரி வந்தார் அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது. ரிக்கட் "Confirm" பண்னி ஆச்சு , நிங்கள் இப்ப அமெரிக்க போறதில ஒரு பிரச்சனையும் இல்லை..
ஆனால் .... இழுத்தார்...
நெஞ்சு பகீர் என்றது.......
என்ன ஆனால்........
அதில ஒரு சின்ன பிரச்சனை இரண்டு பேரும் ஒன்டா போகமுடியாது.
நிங்கள் இப்ப போகலாம் , மனைவி அடுத்த பிளைட்டில் தான் வரலாம். அடுத்த பிளைட் 18 மணித்தியாலங்கள் பிந்தித்தான் வரும்.
அதிகாரி குண்டை போட்டார்....
இதுக்கு நீங்கள் சம்மதம் என்றால் , இந்த ரிக்கட்டிலேயே அமெரிக்கா போகலாம், அப்படி இல்லை என்றால் இன்று போய் வசதியான ஒரு நாளுக்கு உங்கள் பயணத்தை நீங்கள் ஒழுங்கு செய்யலாம்.
அதிகாரி மின்னாமல் இடி இடித்தார்....
திரும்பி போய் அம்மா , தம்பிக்கு முன்னால் நிற்பதை நினைக்க அவமானமாய் உணர்ந்தார் நம்ம ஆள்.
நம்ம ஆள் தலையை சோறிந்தார்.......(சிந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.......)
தீர்க்கமாய் இப்பொழுது தலையை நிமிர்த்தி அதிகாரியை பார்த்து சொன்னார்......
நான் இப்ப போறன் மனைவி அடுத்த பிளைட்டில் வரட்டும்......
நம்ம ஆள் எடுத்த அதிரடி முடிவில் மனைவி குழம்பிபோனாள்.....
மனைவியை சமாதானப்படுத்தி ,
மனைவியின் பயணத்தில் எந்த பிரச்சனையும் இனி வராது என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிசெய்து விட்டு , தனது கைக் கணணியையும் (Laptop) அவளிடம் கொடுத்துவிட்டு "நான் போனவுடன் இமெயில் போடுறன் " என்ற வாக்குறுதியுடன்
சோகத்துடன் மனைவியிடம் இருந்து விடைபெற்றார்........
நம்ம ஆள் இப்ப பிளைட்டில் பறக்க , மனைவி விருந்தினர் இருக்கையில் சோகமாய் இருந்தாள்
(போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே...., நானும் சேர்ந்து போக ஒரு சிறகும் இல்லையே.. என்ற பின்னனி பாடல்(Situation song) போட்டால் இந்த இடத்துக்கு நல்லா இருக்கும்)
ஒருவாறாக அமெரிக்க மண்ணில காலடி எடுத்து வைத்தார் நம்ம ஆள்.
ரக்ஸி பிடித்து அவர் பதிவு செய்து வைத்துருந்த தங்ககம் வந்து சேர்ந்தார்.....சொந்த நாட்டைபோல் அல்லாமல் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாததால் நம்ம ஆள் மனதில் அமெரிக்கவிற்க்கு ஒரு தனி மரியாதை எழுந்தது.
மனதுக்குள் தனது நாட்டை திட்டித்தீர்த்தார்........
முதல் வேலையாக தங்ககம் வந்து மனைவிக்கு இமெயில் போட்டார். மனைவி வந்து சேர இன்னும் 18 மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தது......
வந்த அசதிக்கு குளித்து விட்டு அப்படியே கட்டிலில் சரிந்தவர்தான் , நன்றாக தூங்கிப்போனார்....
ஒரு இரண்டு, மூன்று மணித்தியாலம் கடந்திருக்கும் வாசல் கதவையாரோ பலமாக தட்ட சென்று பார்த்தவருக்கு திகைப்பு வாசலில் நின்றது பொலிஸ்.....
உங்கட றூமை செக் பண்ண வெணும் என்டாங்கள்.........
நம்மட ஊரிலதான் இந்தக்கொடுமை என்றால் இங்கேயுமா?.....
சோதனை போட அனுமதித்தார் நம்ம ஆள்.....
போலிஸ்காரன் முதல் வேலையாய் கணணியை ஏதோ தூளாவினான்.
சிறிது நேரத்தில் தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தான். யாரொ கிரிமினலை பிடித்து விட்டதாக கைத்தொலைபேசியில் சொன்னன்.
நம்ம ஆளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பொலிஸ்காரன் கேட்டான்....
இந்த கணணியை இரண்டு மணித்தியாலத்திற்க்கு முதல் நீர் உபயோகித்தீரா என்றான்?
நம்ம ஆள் பவ்வியமாக ஆம் என்றார்.
உம்மை சைபர் கிரைமில் கைது செய்கிறேன் என்றான் போலிஸ்காரன்.....
நம் ஆளுக்கு ஒன்டும் விளங்கவில்லை , தனது மனைவிக்கு இமெயில் மட்டுமே அனுப்பியதாக புலம்பிப்பார்த்தார் , அவன் விடுவதாய் இல்லை .
பொலிஸ்காரன் கத்தினான் உனது லூசுதனமான வேலையால் யாரொ ஒரு அமெரிக்க பெண்மணி சாகக்கிடக்கிறாளாம்......
நான் என் மனைவிக்கு இமெயில் அனுப்பினால் உவனுக்கு என்ன ?
என்ன உளறுகிறான்....
நம்ம ஆள் இப்ப தகர்ந்து போனார், தலை சுற்றியது.
கட்டிய மனைவி நடுத்தெருவில் , நான் இப்பொழுது அமெரிக்கா போலிஸில் எல்லாம் மெல்ல கை நழுவுவது போல இருந்தது...
வாழ்க்கை வெறுத்தது....
நம்ம ஆள் ஆத்திரத்தில் உளறினார்.
நம்ம ஆள் உளறது எதுவும் விளங்காமல் , பொலிஸ்காரன் ஒரு மொழி பெயர்ப்பாளன் ஒருவனை கொண்டுவந்தான்....
இதுவேறு மானப்பிரச்சனையாகியது நம் ஆளுக்கு!
நம் ஆள் மொழிபெயர்ப்பாளனுக்கு அளாக்குறையாக பிரச்சனையை விளங்கப்படுத்த மொழிபெயர்ப்பாளன் எதோ பொலிஸ்க்கு சொல்ல 3 மணித்தியால போராட்டத்திற்க்கு பிறகு , பொலிஸ்காரன் மெல்லிய புண்னகையோடு விடுவித்தான்.
இப்ப் நம்ம ஆள் மொழிபெயர்ப்பாளனிடம் கேட்டான் .....
என்ன பிரச்சனை....இங்கே இமெயில் அனுப்பினா பிடிப்பினமே!
மொழிபெயர்ப்பாளன் சிரித்துவிட்டு சொன்னான் உம்மட மனிசிக்கு நீர் அனுப்பிறதில பிரச்சனையில்லை ஆனால் நீர் போய் அடுத்தவன்ர மனிசிக்கெல்லோ அனுப்பியிருக்கிறீர்.
இப்பத்தான் விளங்கியது நம்மாளுக்கு தான் பிழையான முகவரிக்கு இமெயில் அனுப்பினது.
மொழிபெயர்ப்பாளன் தொடர்ந்தான் அனுப்பினது தான் அனுப்பினீர் , புருசன் நேற்றுத்தான் செத்து கவலையில இருக்கிற ஆளாப்பார்த்தெல்லோ அனுப்பியிருக்கிறீர்.
உம்மட இமெயிலை பாத்திட்டு அந்த பெண் மயங்கி விழ , அந்த அமெரிக்க பெண்மனியின்ட மகன்காரன் கடுப்பாகி பொலிஸ்க்கு சொல்லிப்போட்டான் இது தான் நடந்தது.
அமெரிக்காவில கொஞ்சம் இந்த விசயங்களில கவனமாய் இருங்கோ என்கின்ற அறிவுரையுடன் மொழிபெயர்ப்பாளன் விடைபெற்றான்.
நம்ம ஆள் முதல் வேலையாய் வந்து தான் அனுப்பிய இமெயிலை திருப்பி வாசித்தார்........
To: My Loving Wife
Subject: I've Reached
Date: 01 June, 2008
I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival tomorrow.
Looking forward to seeing you TOMORROW!
Your loving Hubby........
ஓ கணவன் செத்துகிடகிற மனைவிக்கு இப்படி கணவனிடம் இருந்து இமெயில் போனால் யார்தான் குழம்ப மாட்டார்கள் என்று நினைத்தவாறு தன் வீரதீரச்செயலை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தவாறு மனைவியை அழைக்க விமானநிலையம் வந்தார்.....
மனைவி தூரத்தில் தெரிந்தாள்....
மனதுக்குள் பழைய உற்சாகம்......
ஓடிப்போனார் நம்ம ஆள்..... சினிமா படங்களில் வருவது போல் கட்டி அணைத்து மனைவிக்கு முத்தமிட....
இவர் கிட்ட வந்த பின்னர் தான் மனைவி பத்திரகாளி கோலத்தில் தெரிந்தாள்.....
"ஒரு பொம்பிளையை தனியா விட்டு விட்டு ,என்ன மனிச ஜென்மமோ தெரியேல்ல , இமெயில் அனுப்பிறன் என்டு சொல்லிப்போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு என்ன செய்தியள்?"
"ஒருக்கா போன் பண்ணி பாத்திருக்கலாம் தனே?"
"அமெரிக்கா வந்து முதல் நாளே இப்படி என்றால் ? என்ட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ?"
நம ஆள் செய்வதறியாது திகைத்து நின்றார். முதலுக்கே நஸ்டம் வந்தது போல் இருந்தது , இனி தேன் நிலவு விளங்கியமாதிரித்தான்....
(சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுகின்றேன்........)