Saturday, January 5, 2008

உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்

1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.

1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.
1.ஆர்மெனியா (Armenia )
2.அசெர்பைஜான் (Azerbaijan )
3.பயிலொரஷ் (Belarus )
4.எஸ்ரொனியா (Estonia )
5.ஜோர்ஜியா (Georgia )
6.கசகஸ்தான் (Kazakhstan)
7.கிர்கிஸ்தான் (Kyrgyzstan )
8.லற்வியா (Latvia )
9.லிதுவேனியா(Lithuania )
10.மோல்டொவா (Moldova )
11.ரஷ்யா (Russia )
12.ரஜிகிஸ்தான் (Tajikistan)
13.ரேர்க்மெனிஸ்தான் (Turkmenistan )
14.உக்ரேய்ன் (Ukraine )
15.உஸ்பெக்ஸ்தான் (Uzbekistan )


1990 களின் ஆரம்பத்தில் யுகோசலாவாக்கியாவின் வீழ்ச்சியுடன் 5 புதிய நாடுகள் உதயமாகின.
1. பொஸ்னியா (Bosnia- 29/02/1992 இல்)
2.குரோசியா (Croatia-25/06/1991 இல்)
3.மசடோனியா (Macedonia- 08/09/1991 இல் அது தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த்த போதும் 1994 ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கிகாரம் பெற முடிந்தது.)
4.மொன்டினிக்குரோ (Montenegro -03/06/2006)
5.சேர்பியா (Serbia- 17/04/1992)
6.சலோவேனியா (Slovenia- 25/06/1991 இல்)

21/03/1990 நம்பியா(Namibia) , தென் ஆபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.

23/05/1990 இல் வடக்கு யெர்மனும் தெற்க்கு யேர்மனும் இனைந்து யெர்மன்(Yemen) எனும் புதிய நாடு உருவாகியது.

03/10/1990 இல் கிழக்கு ஜெர்மனியும் ,மேற்க்கு ஜெர்மனியும் இனைந்து ஜெர்மனி(Germany) எனும் நாடு உலக பந்தில் மீண்டும் உருவானது.

17/09/1991 மார்ஷல் தீவுகள்(Marshall Islands) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

17/09/1991 மைக்கிரோனேசியா(Micronesia) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

01/01/1993 ம் ஆண்டு செக்கொசெலாவாக்கியா செக்(Czech) குடியரசாகவும் , செலோவாக்கியாவாகவும்(Slovakia) இரண்டாய் பிரிந்தன.

25/05/1993 எரித்திரியா(Eritrea) வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.



1/10/1994 போலலு(Palau) அமெரிக்காவின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

20/05/2002 கிழக்கு தீமோர் (East Timor) 1975 ம் ஆண்டு போர்த்துகல் இடம் இருந்து சுதந்திர நாடாகிய போதும் ,தனது இறைமையை இந்தோனேசியாவிடம் இழந்தது. மீண்டும் 2002 இல் தனது வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

சோமாலிலாந்து (Somaliland) 18/05/1991 இல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்ததுடன் இன்றுவரை அமெரிக்காவாலும் சில ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளாலும் அங்கிகரிக்க பட்ட ஓர் நாடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.



தமிழீழம் (Tamil Eelam)- 14/5/1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படி சிறிலங்கா குடியரசில் இருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்னும் தனி நாடொன்றை அமைப்பதற்காய் இன்று வரை போராடிவரும் நாடு.