Wednesday, September 5, 2007

உயிர் பூக்கள் விதைத்தபடி....



உயிர் பூக்கள் விதைத்தபடி
நீள்கிறது கண்ணீரின் பயணம்.

அசுவாசப்படுத்த முடியாத
இதயத்தின் விம்மலோடு,
முடிவற்று நீள்கிறது,
காலத்தின் பயணம்.

நாளைய இருப்பு என்பது
உறுதியற்றதாய் இரவுகள்
தொடர்கின்றன.
மானுடம் மரித்துப்போய்
சாம்பராய்க் கிடக்கிறது.

நீட்டியும், நிமிர்த்தியும், குவித்தும்
அடுக்கிய பிணங்களின்
எண்ணிக்கை கணக் கெடுத்தபடி
கிழக்கு விடிகிறது.

(அ)நாகரிக உலகத்தில்
உயிர் வாழ்தலுக்கான துடிப்பு
பயங்கரவாதமாய் தெரிகிறது.
இராசபக்சேகளின் அம்மண நடனத்தில்
ஐ.நா மெய் மறந்து கிடக்கிறது.

No comments:

Post a Comment